ADDED : ஜன 31, 2024 07:06 AM
திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே கிராசிங்கில் தண்டவாளங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் பதிக்கப்பட்டுள்ள கற்களுக்கு இடையில் இடைவெளி, பள்ளம் இருப்பதால் இலகுரக வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.
வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த இடத்தில் பாலம் கட்டப்பட உள்ளதால் பள்ளங்களை சீரமைக்க ரயில்வே துறை முன் வரவில்லை.