ADDED : செப் 21, 2025 04:51 AM
திருமங்கலம்:திருமங்கலம் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன்கள் குறித்த செயல்பாடுகள்,பாடல்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பங்கேற்றவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியம், செல்வி பரிசு வழங்கினர். ஆசிரிய பயிற்றுநர்கள் பாண்டிய லட்சுமி, ராஜேஸ்வரி பயிற்சி அளித்தனர். திருமங்கலம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன் ஏற்பாடு செய்திருந்தார்.