ADDED : செப் 03, 2025 05:50 AM
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் அல்ட்ரா கல்லுாரி மூன்றாமாண்டு தமிழ்த்துறை மாணவர்களுக்கான ஒருவார கால படிப்பிடைப் பயிற்சியின் நிறைவு விழா நடந்தது. மாணவி மகாலட்சுமி வரவேற்றார்.
செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். கல்வி அலுவலர் நடராஜன் பயிற்சி அறிக்கை வாசித்தார். பொருளாளர் செந்தில்குமார் சான்றிதழ் வழங்கினார். மாணவர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.