குன்றத்தில் வசந்த உற்ஸவம் துவக்கம்
குன்றத்தில் வசந்த உற்ஸவம் துவக்கம்
குன்றத்தில் வசந்த உற்ஸவம் துவக்கம்
ADDED : ஜூன் 01, 2025 03:56 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக வசந்த உற்ஸவம் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது.
கோயிலில் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து காப்பு கட்டப்பட்டது. இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டப மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். அங்கு 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவம் நடந்தது.
இந்த உற்ஸவம் ஜூன் 8 வரை நடக்கும். ஜூன் 9 அன்று விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். திருப்பரங்குன்றம், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சுமந்து வரும் பால் குடங்களில் இருக்கும் சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை தொடர்ந்து பால் அபிஷேகம் செய்யப்படும்.
ஜூன் 10 காலையில் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளுவர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் சுவாமி கோயிலுக்கு திரும்புவார்.