ADDED : மார் 23, 2025 03:45 AM
கொட்டாம்பட்டி : காரியேந்தல்பட்டி கருப்பணசுவாமி காளியம்மாள் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மார்ச் 16 காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்தனர்.
நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இன்று (மார்ச் 23) பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தி கருப்பணசுவாமி, காளியம்மன் கோயிலுக்கு சென்று நேத்திக்கடன் செலுத்துவர். மார்ச் 24 மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.