Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எள் அறுவடையில் விவசாயிகள்

எள் அறுவடையில் விவசாயிகள்

எள் அறுவடையில் விவசாயிகள்

எள் அறுவடையில் விவசாயிகள்

ADDED : மார் 23, 2025 03:46 AM


Google News
பேரையூர் : பேரையூர் பகுதியில் கார்த்திகை பட்டத்தில் விதைத்த எள் மகசூல் நிலையை அடைந்ததால் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் மானாவாரி நிலங்களில் கார்த்திகை மாதத்தில் விவசாயிகள் எள் விதைப்பு செய்தனர். எள் அறுவடை செய்து வரும் விவசாயிகள் மொத்தமாக குவித்து வைத்து 8 நாட்களுக்கு பிறகு அதை வெயிலில் உலர்த்தி எள்ளை பிரித்து எடுக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் தரம் பிரித்த எள்ளை தங்கள் வீட்டுக்கு தேவையான நல்லெண்ணெய்க்கு செக்கில் ஆட்டி பயன்படுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us