Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாகனம் மோதி புள்ளிமான் பலி

வாகனம் மோதி புள்ளிமான் பலி

வாகனம் மோதி புள்ளிமான் பலி

வாகனம் மோதி புள்ளிமான் பலி

ADDED : ஜூன் 16, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி அருகே நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்க முயன்ற 2 வயது புள்ளி மான் வாகனம் ஒன்று மோதி இறந்தது. மருத்துவ பரிசோதனையில் வயிற்றுப்பகுதியில் ரத்தம் உறைந்தும், ஒரு கால் முறிந்தும் இருப்பது தெரியவந்தது.

எச்சரிக்கை பலகை


சில வாரங்களுக்கு முன்பு வாலாந்துார் அருகே புத்துார் செல்வராஜ் 55, டூ வீலரில் சென்ற போது மான் திடீரென குதித்து ஓடியதால், நிலைத்தடுமாறி விழுந்து காயமுற்றார். இப்பகுதி மலைகளில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவை மேய்ச்சலுக்காக வாலாந்துார் கண்மாய் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் அதிகமாக நடமாடுகின்றன.

இப்பகுதி ரோட்டில் 'வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதி, வாகனங்கள் கவனமாகச் செல்ல வேண்டும்' என்ற எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us