ADDED : ஜூலை 02, 2025 08:07 AM
மதுரை; மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் சாந்தி யோக தியானம் நடந்தது.
அகம்புறம் கிளர்ச்சிகள் அடங்கவும், உடல் தத்துவங்கள் பலம் பெறவும், தேசத்தில் அமைதி ஏற்பட வேண்டியும் சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் யோகக்கிரியாவை நடத்தினார். இவர் காஞ்சி பரமாச்சாரியரிடம் நயன தீக்ஷையும், திண்டுக்கல் சுவாமி சரவணாந்தரிடம் சன்மார்க தீக்ஷையும் பெற்றுள்ளார்.