/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநகராட்சி கமிஷனருக்கு தி.மு.க.,வினர் மறைமுக நெருக்கடி மாநகராட்சி கமிஷனருக்கு தி.மு.க.,வினர் மறைமுக நெருக்கடி
மாநகராட்சி கமிஷனருக்கு தி.மு.க.,வினர் மறைமுக நெருக்கடி
மாநகராட்சி கமிஷனருக்கு தி.மு.க.,வினர் மறைமுக நெருக்கடி
மாநகராட்சி கமிஷனருக்கு தி.மு.க.,வினர் மறைமுக நெருக்கடி
ADDED : ஜூலை 02, 2025 08:00 AM
மதுரை : வரி விதிப்பு முறைகேடு சம்பவத்தில் நடவடிக்கை எடுத்து வரும் மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், அவருக்கு எதிராக துாய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு, தி.மு.க., மாநகர செயலர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதுரை மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல் மாநகராட்சி அலுவலகத்தில், 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி வளாகத்தில் முகாமிட்டு சமையல் செய்து சாப்பிட்டு, இரண்டாம் நாளாக நேற்றும் போராட்டத்தை நடத்தினர். கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையே தி.மு.க., மாநகர செயலர் தளபதி தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர், போலீஸ் தடுப்பையும் மீறி மாநகாட்சி மைய அலுவலகத்திற்குள் நுழைந்தனர். முன்னெச்சரிக்கையாக கமிஷனர் அலுவலகம் முன் கதவுகளை போலீசார் மூடினர். அவர்களிடம் தல்லாகுளம் போலீசார் பேச்சு நடத்தினர்.
போராட்டம் தீவிரம் அடையும் நிலையில், போலீஸ் அதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். அதில் கோரிக்கைகள் ஏற்கபட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'மாநகராட்சி வரிமுறைகேடு தொடர்பாக நேர்மையாக விசாரிக்க கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுக்கிறார். இதனால் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், தி.மு.க., பிரமுகர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். இதற்காக தான் கமிஷனரை கண்டித்து நடந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவருக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுக்க முயற்சித்தனர். ஆனால், போராட்டத்திற்கு கமிஷனர் சித்ரா சாமர்த்தியமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்' என்றனர்.