ADDED : ஜூன் 28, 2025 12:56 AM
மதுரை: மதுரை சேவாலயம் மாணவர் இல்லத்தில் தமிழ்நாடு ஹரிஜன் சேவா சங்கம் சார்பில் ஆண்டு விழா நடந்தது.
செல்லவேலுக்கு 'மனிதநேய செம்மல்' விருது, ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்.பி., மோகன், காந்தி மியூசிய நுாலகர் ரவிச்சந்திரன், பேராசிரியர் அக்கிபா ஆகியோருக்கு 'சேவையாளர்' விருதுகளை சேவாலய செயலாளர் சீனிவாசன் வழங்கினார்.
இளைஞர் நீதி குழுமம் அதிகாரி பாண்டியராஜன், ராஜபாளையம் காந்தியவாதி சங்கர் கணேஷ், சமூக செயற்பாட்டாளர் விஜய பாண்டியன், தண்ணீர் தண்ணீர் அறக்கட்டளை ஜெகதீசன், மனிதநேயம் அறக்கட்டளை பரமானந்தம், புனிதா, சபேரா பீவி, டாக்டர் கருணாகரன், ஜே.சி., அமைப்பு ரத்தீஷ்பாபு பங்கேற்றனர்.
சுவாமிநாதன் ஒருங்கிணைத்தார்.