ADDED : மார் 26, 2025 03:56 AM
மதுரை : மதுரை தனக்கன்குளம் சுரேஷ்31, மேலமடை சரவணன்26, உசிலம்பட்டி அருகே அன்னமார்பட்டி பிரசாத்31, கருக்கட்டான்பட்டி நாகேந்திரன்30. இவர்களிடம் ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா 95 கிலோவை மாமரத்துப்பட்டியில் 2023ல் உசிலம்பட்டி டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை போதைப்பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி செங்கமலசெல்வன் உத்தரவிட்டார்.