/உள்ளூர் செய்திகள்/மதுரை/தமுக்கத்தில் ரோபோடிக் பறவைகள் கண்காட்சிதமுக்கத்தில் ரோபோடிக் பறவைகள் கண்காட்சி
தமுக்கத்தில் ரோபோடிக் பறவைகள் கண்காட்சி
தமுக்கத்தில் ரோபோடிக் பறவைகள் கண்காட்சி
தமுக்கத்தில் ரோபோடிக் பறவைகள் கண்காட்சி
ADDED : ஜன 06, 2024 06:09 AM
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள ரோபோடிக் பறவைகளை காண மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.
தளபதி எம்.எல்.ஏ திறந்து வைத்த இக்கண்காட்சியில் மயில், நெருப்பு கோழி, பென்குயின் போன்ற பறவைகள், யானை, சிங்கம், புலி உருவங்களும் ரோபோடிக்கில் உருவாக்கி ஒலி, அசைவுகளுடன் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 'செல்பி பாயின்ட்கள்' உள்ளன. சைனீஸ் உணவுகள், 3டி காட்சிகள் என 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன.
இக்கண்காட்சியை தினமும் மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 வரை கண்டுகளிக்கலாம் என மார்சல் என்டர்டைமென்ட் நிர்வாகி சிட்டிபாபு தெரிவித்தார்.