/உள்ளூர் செய்திகள்/மதுரை/ லட்சுமி தீர்த்த குளத்தில் சீரமைப்பு பணி நிறைவு லட்சுமி தீர்த்த குளத்தில் சீரமைப்பு பணி நிறைவு
லட்சுமி தீர்த்த குளத்தில் சீரமைப்பு பணி நிறைவு
லட்சுமி தீர்த்த குளத்தில் சீரமைப்பு பணி நிறைவு
லட்சுமி தீர்த்த குளத்தில் சீரமைப்பு பணி நிறைவு
ADDED : ஜூன் 28, 2025 12:26 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் லட்சுமி தீர்த்த குளத்தில் (திருக்குளம்) ரூ. 6.50 கோடியில் நடந்த சீரமைப்பு பணிகள் நேற்று நிறைவடைந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் லட்சுமி தீர்த்த குளத்தின் உள்பகுதியில் 4 மூலைகளிலும் இருந்த கருங்கல் சுவர்கள் இடிந்து விழுந்தது. அக்குளம் பழமை மாறாமல், ஏற்கனவே இருந்த கருங்கற்களைக் கொண்டு சீரமைப்பு பணிகளும், வடக்கு பகுதியில் சிமென்ட் கான்கிரீட் சுவர் அமைத்து அதன் உட்பகுதியில் கருங்கற்கள் ஒட்டும் பணியும் நிறைவடைந்தது.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா ஆலோசனைப்படி, திருக்குளத்தின் உட்பகுதியை சுற்றி நான்கு அடி உயரத்திற்கு புதிய சிமென்ட் துாண்கள், அதன்மேல் பகுதியில் சுதை வேலைகள், இடைப்பட்ட பகுதிகளில் இரும்பு கேட்கள் அமைத்து வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது.
குளத்தின் மேற்குப் பகுதியில் முன்பிருந்த மரங்களின் வேர்களால் சுவர்கள் இடிந்து விழுந்தன. அப்பகுதியில் மீண்டும் மரங்கள் வளர்ந்து குளத்திற்கு மீண்டும் சேதம் ஏற்படாத வகையில் குளத்தைச் சுற்றிலும் மேல்பகுதியில் 4 மீட்டர் அகலத்திற்கு கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. திருக்குளம் என்ற பெயருக்கேற்ப குளம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. அதன் மையப் பகுதியில் முன்பு கருங்கல்பீடம், அதில் மின்விளக்கு இருந்தது. தற்போது கருங்கல் பீடத்தில் அமர்ந்த நிலையில் லட்சுமி சிலை வைக்கப்பட்டுள்ளது.
கோடையில் குளத்தில் தண்ணீர் நிரப்ப ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது.