ADDED : ஜன 08, 2024 05:04 AM
மதுரை : மதுரை நகரில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படையில் பணியாற்றும் 45 கிரேடு 1 போலீசார் ஏட்டுக்களாக பதவி உயர்வு பெற்றனர். கமிஷனர் லோகநாதன் சான்றிதழ் வழங்கினார்.
அவர் பேசுகையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப போலீஸ்காரர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை முழுமையாக பயன்படுத்தியும், அதனால் நிகழும் குற்றங்கள் பற்றிய புரிதலையும் போலீசார் மேம்படுத்திக்கொள்வது அவசியம். ஸ்டேஷனுக்கு வரும் மனுதாரர்களை கனிவுடன் நடத்த வேண்டும் என்றார். தலைமையிடத்து துணை கமிஷனர் மங்களேஸ்வரன் பங்கேற்றனர்.