/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு திருவிழா திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு திருவிழா
திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு திருவிழா
திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு திருவிழா
திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு திருவிழா
ADDED : ஜூன் 11, 2025 05:34 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான மொட்டையரசு திருவிழா நேற்று நடந்தது.
கோயிலில் மே 31ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கிய விசாக திருவிழாவில் தினம் இரவு 7:00 மணிக்கு சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த உற்ஸவம் நடந்தது. நேற்றுமுன்தினம் பால்குட உற்ஸவம் நடந்தது.
நேற்று காலை உற்ஸவர் சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைகள் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளினர். பக்தர்களின் திருக்கண் மண்டபங்களில் அருள்பாலித்து, இரவு 11.30 மணிக்கு பூப்பல்லக்கில் சுவாமி கோயில் சென்றடைந்தார்.