ADDED : ஜன 07, 2024 06:51 AM

மேலுார்: பழைய ஒக்கப்பட்டியில் மந்தை கருப்பணசுவாமி, முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இளைஞர்கள், கிராமத்தினர் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்கியதில் 5க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.