ADDED : பிப் 25, 2024 04:00 AM
வாடிப்பட்டி,: வாடிப்பட்டி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் திருவாலவாயநல்லுாரில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உதவி இயக்குனர் பாண்டி அரசின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், வேளாண் அறிவியல் நிலைய துணை பேராசிரியர் சுரேஷ், வேளாண்மை அலுவலர் சத்தியவாணி, துணை அலுவலர் பெருமாள் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இடுபொருட்கள் குறித்தும் விளக்கினர். ஊராட்சி தலைவர் சகுபர் சாதிக், துணைத் தலைவர் மாலிக் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் தங்கையா, விக்டோரியா செலஸ், அலுவலர்கள் செய்திருந்தனர்.