ADDED : மே 21, 2025 04:53 AM
சோழவந்தான் : சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியின் போது சோழவந்தான் பஸ் ஸ்டாண்டில், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் பிரபு 32, என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தார்.
அவரை சோதனை செய்த போது 8 கிலோ கஞ்சா வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.