Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வரதட்சணை கொடுமையால் மதுரை பெண் தற்கொலை கணவர் குடும்பத்தினர் 'எஸ்கேப்'

வரதட்சணை கொடுமையால் மதுரை பெண் தற்கொலை கணவர் குடும்பத்தினர் 'எஸ்கேப்'

வரதட்சணை கொடுமையால் மதுரை பெண் தற்கொலை கணவர் குடும்பத்தினர் 'எஸ்கேப்'

வரதட்சணை கொடுமையால் மதுரை பெண் தற்கொலை கணவர் குடும்பத்தினர் 'எஸ்கேப்'

ADDED : செப் 02, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரையில், வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் தலைமறைவான கணவர் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் அக்கினி மகள் பிரியதர்ஷினி, 28. மதுரை, செல்லுார் இலங்கேஸ்வரன் மகன் ரூபன்ராஜ். இருவருக்கும், 2024 செப்., 5ல் திருமணம் நடந்தது.

ரூபன்ராஜின் சகோதரிக்கு, 300 சவரன் நகை வரதட்சணையாக அளித்து திருமணம் செய்ததால், பிரியதர்ஷினிக்கும் அதே அளவு நகையை, அக்கினியிடம் கேட்டுள்ளனர்.

இதற்கு, 'அந்தளவு இயலாது; பாதியளவு நகை போடுகிறோம். மற்றதை, பின்னர் பேசிக்கொள்ளலாம்' எனக்கூறி திருமணத்தை முடித்தனர்.

ஒரே மாதத்தில் வரதட்சணை கேட்டு, பிரியதர்ஷினியை கணவர் வீட்டார் கொடுமைபடுத்தி உள்ளனர்.

ரூபன்ராஜ் கடையை அடைத்து விட்டு, இரவு 11:30 மணிக்கு வீட்டுக்கு வந்த பின்தான், பிரியதர்ஷினி உணவருந்த வேண்டும் என, அவரது நாத்தனார் வாசுகிதேவி, மாமியார் தனபாக்கியம், மாமனார் இலங்கேஸ்வரன் மிரட்டியுள்ளனர்.

கடந்தாண்டு நவ., 13ல் ரூபன்ராஜ் தங்கை சாந்தினிதேவி, சித்தப்பா ரமேஷ், அத்தை உமா மகேஸ்வரி, மாமா சிங்கத்தமிழன் ஆகியோர் பாக்கி நகையை கேட்டு பிரச்னை செய்தனர்.

மார்ச் 15ல் அடித்து கொடுமைப்படுத்தியதில், காயமடைந்த பிரியதர்ஷினி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது பெற்றோர், திருமணத்தை முன்னின்று நடத்திய குப்பணம்பட்டி தேவராஜ் என்பவரை அழைத்து பேசினர். மேலும், '50 சவரன், 10 லட்சம் ரூபாய் வழங்கினால் மகளை நல்ல முறையில் வாழ வைக்கலாம்' என, அவர் தெரிவித்துள்ளார்.

பிரியதர்ஷினி வீட்டார், இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்ட நிலையில், தொடர்ந்து துன்புறுத்தியதால் செல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்து, மகளை தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

பலமுறை பேச்சு நடத்தியும், 'நகை இன்றி சேர்ந்து வாழ முடியாது' என, கணவர் வீட்டார் கூறியதால், பிரியதர்ஷினி மனமுடைந்தார். விரக்தியில், ஆக., 29ல் நாத்தனார் வாசுகிதேவி காலில் விழுந்தாவது வாழ்வதாக கூறி செல்லுார் சென்றார்.

அன்று மதியம் 2:00 மணிக்கு, பெண் வீட்டாரை தொடர்பு கொண்ட ரமேஷ், அரசு மருத்துவமனையில் பிரியதர்ஷினி கவலைக்கிடமாக உள்ளார் என, அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பதறியடித்து சென்று பார்த்தபோது, கையில் வெட்டுக் காயத்துடன் பிரியதர்ஷினி சிகிச்சை பெற்று வந்துள்ளார். 'இந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது' என பெற்றோரிடம் புலம்பிய பிரியதர்ஷினி, ஆக., 30 இரவில் இறந்தார்.

வரதட்சணை கொடுமையால், கையை அறுத்துக்கொண்டு அவர் தற்கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, ரூபன்ராஜ், ரமேஷ், உமா மகேஸ்வரி, சிங்கத்தமிழன், வாசுகிதேவி, முகுந்தன், இலங்கேஸ்வரன், தனபாக்கியம், சாந்தினிதேவி, தேவராஜ் ஆகியோர் மீது, செல்லுார் போலீசார் வரதட்சணை வழக்கு பதிந்தனர். தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us