ADDED : பிப் 11, 2024 12:51 AM

மதுரை: மதுரை புதுார் லுார்து அன்னை சர்ச் 104வது ஆண்டு பெருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது.
சிவகங்கை ஆயர் லுார்து ஆனந்தம் தலைமை வகித்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் சந்தனமாதா வீதியில் துவங்கி, பல பகுதிகளில் பவனி வந்தது. அழகர்கோவில் மெயின்ரோடு வழியாக நிலையை அடைந்தது.
பாதிரியார் ஜார்ஜ், உதவி பாதிரியார்கள்யர்கள் பாக்கியராஜ், யூஜின் ஜஸ்டின், இம்மானுவேல், ஜான்பீட்டர் ஜேம்ஸ் சுந்தர், ராஜசேகரன், அனைத்து பங்குகளை சேர்ந்தவர்கள் செபமாலை, திருப்பலி, தேர்பவனியில் பங்கேற்றனர்.