/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அறத்தின் பாதையை தேர்ந்தெடுப்போம் நாம் அறத்தின் பாதையை தேர்ந்தெடுப்போம் நாம்
அறத்தின் பாதையை தேர்ந்தெடுப்போம் நாம்
அறத்தின் பாதையை தேர்ந்தெடுப்போம் நாம்
அறத்தின் பாதையை தேர்ந்தெடுப்போம் நாம்

அனைவருக்கும் அதிகாரம்
அதிகாரமும், லாபமும் பழைய தூண்களில் அல்லாமல், உள்ளடக்கம், மனித நலன், நிலைத்தன்மை, புதிய பொருளாதாரம் மற்றும் அஹிம்சை ஆகியவற்றின் உறுதியான அடித்தளத்தில் புதிய உலக அமைப்பை கட்டியெழுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். பிட்ரோடாவின் கனவு தைரியமும் புதுமையும் நிறைந்தது. செயற்கை நுண்ணறிவு, மேக கணினி, இணைய பொருட்கள் போன்ற டிஜிட்டல் புரட்சி, சிலருக்காக மட்டும் அல்ல, அனைவருக்கும் அதிகாரம் வழங்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் நம்புகிறார்.
மறந்து போன அறம்
நாம் மறந்துபோன அறத்தை எவ்வாறு மீண்டும் மீட்டெடுக்கலாம் என எண்ணி பார்க்க வேண்டும். இரக்கம் பலவீனமல்ல, அது நம் பலம்; பணிவு குறைபாடு அல்ல, அது நம் பெருமை. பதில், நம் முன்னோர்களின் முதன்மை நெறிகளை மீண்டும் அணுகுவதில்தான் உள்ளது. இந்த பூமியில் வாழ்வதுஒரு உரிமை மட்டுமல்ல; அது நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும், இயற்கைக்கும், இன்னும் பிறக்காத தலைமுறைகளுக்கும் நாம் ஏற்றுக்கொள்ளும் ஒரு புனிதமான பொறுப்பு. இந்த உணர்வை நாம் நம் உள்ளத்தில் நிறுத்திக்கொண்டு, ஒவ்வொரு செயலும், எண்ணமும், இந்த பொறுப்பை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
நம்பிக்கை விதைக்கும் வரலாறு
நாம் பேரழிவைத் தவிர்க்க பாதுகாக்க, அணு வேண்டுமெனில்- சுற்றுச்சூழலை ஆயுதங்களை கட்டுப்படுத்த, செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் அறத்தை நம் திசைகாட்டியாக்க வேண்டும். கல்வி வெறும் தொழில் வாய்ப்புக்கான கருவி அல்ல, நற்பண்பு வளர்க்கும் சூழல் என்பதைக் கட்டியெழுப்ப வேண்டும். முன்னேற்றம் GDP- யால் அல்ல, நம் மனிதநேயத்தின் ஆழத்தால் அளக்கப்பட வேண்டும். தலைவர்கள், அவர்களின் வெளிப்படையான பிரபலத்திற்காக அல்ல உறுதியான மனசாட்சியும் நேர்மையும் கொண்டவர்களாக இருப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.