ADDED : மே 15, 2025 02:15 AM
உசிலம்பட்டி; உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் தலைமையில் ஜமாபந்தி துவங்கியது.
தாசில்தார் பாலகிருஷ்ணன், துணைத்தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர். கருமாத்துார், கோவிலாங்குளம், விக்கிரமங்கலம், பன்னியான், முதலைக்குளம், கண்ணனுார், புள்ளநேரி, பானா மூப்பன்பட்டி, எரவார்பட்டி, சக்கரப்பநாயக்கனுார் கிராமங்களுக்கு நடந்தது. பட்டா மாறுதல், அரசு நலத்திட்டங்கள் குறித்து அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.