Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அ.தி.மு.க., ஒன்றிணைய முழு ஒத்துழைப்பு தருவேன்

அ.தி.மு.க., ஒன்றிணைய முழு ஒத்துழைப்பு தருவேன்

அ.தி.மு.க., ஒன்றிணைய முழு ஒத்துழைப்பு தருவேன்

அ.தி.மு.க., ஒன்றிணைய முழு ஒத்துழைப்பு தருவேன்

ADDED : செப் 11, 2025 05:13 AM


Google News
அவனியாபுரம் : ''அ.தி.மு.க., ஒன்றிணைய முழு ஒத்துழைப்பு தருவேன்,'' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அவர் கூறியதாவது:

அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். அதற்கு முழு ஒத்துழைப்பும் தருவேன்.

ஒன்றிணைந்தால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று அனைவரது கருத்தும் வரவேற்கக் கூடியது. அதுதான் நடக்கும். ஒன்றிணைய வேண்டும் என்கிற எண்ணம் அனைவரின் மத்தியிலும் உள்ளது. ஒன்றிணைந்தால்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் எண்ணம் நிறைவேறும்.

இதில் மாறுபடுவதற்கான காரணத்தை பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும்.

பழனிசாமியை தவிர முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் கூட்டணிக்கு வருவேன் என அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளது ஆழமான கருத்து. என்னைப் பொறுத்தவரை கட்சி இணைவது குறித்து நான் எந்தவித 'டிமாண்டும்' வைக்கவில்லை.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

அ.தி.மு.க., ஒன்றிணைந்தால் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வீர்களா எனக்கேட்கின்றனர். அதில் பேச வேண்டிய பல பிரச்னைகள் உள்ளன. ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அது நிறைவேறும் பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம்.

செங்கோட்டையன் எடுத்திருக்கும் முயற்சி உறுதியாக வெற்றி பெறும். அவரிடம் தினமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us