/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : செப் 02, 2025 05:45 AM

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதன் உபகோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னை உயர்நீதிமன்றம், 'தமிழக தலைமைச் செயலர் அனைத்துத் துறைகளின் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள், விதிமுறைகளை வகுக்க வேண்டும்' என 2021ல் உத்தரவிட்டது.
அதன்படி தலைமைச் செயலர் தலைமையில் 2021ல் கூட்டம் நடந்தது. அனைத்துத் துறைகளின் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.
அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
அதன் பிறகு கூட்டமும் நடக்கவில்லை. இதனால் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். புனரமைப்பு பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க தலைமைச் செயலர் தலைமையில் மறு ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். இதற்குரிய புள்ளிவிபர அறிக்கையை அரசுக்கு அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
மனுதாரர்: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக 5 மாவட்டங்கள் மற்றும் இலங்கையில் 1250 ஏக்கர் நிலம் உள்ளது. அதை சரியாக பராமரிக்கவில்லை. கும்பாபிஷேகத்தையொட்டி நடக்கும் புனரமைப்பு பணியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லைஎன்றார்.
நீதிபதிகள் தலைமைச் செயலர், அறநிலையத்துறை, வருவாய்த்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, இவ்விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து செப்.4ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.