திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் சோமப்பா சுவாமிகள் 57வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
நேற்று முன்தினம் விளக்கு பூஜை தமிழிசை, யாக பூஜை நடந்தது. நேற்று காலை குருபூஜையை முன்னிட்டு சோமப்பா சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. மலை மேலுள்ள சிவபெருமானுக்கு பூஜை முடிந்து வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.