Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோவில் கும்பாபிஷேக நேரம் முடிவு செய்ய ஐவர் குழு

கோவில் கும்பாபிஷேக நேரம் முடிவு செய்ய ஐவர் குழு

கோவில் கும்பாபிஷேக நேரம் முடிவு செய்ய ஐவர் குழு

கோவில் கும்பாபிஷேக நேரம் முடிவு செய்ய ஐவர் குழு

ADDED : மே 22, 2025 02:41 AM


Google News
மதுரை:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் விதாயகர், சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் தாக்கல் செய்த பொதுநல மனு:

சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூலை 7, காலை 9:00 முதல், காலை 10:30 மணி வரை கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. சிம்ம லக்கனத்தில் வரும் அந்த நேரம் பொருந்தாது. இந்த நேரத்தில் நடத்த தடை விதிக்க வேண்டும்.

நாட்டின் நலனிற்காக 'அபிஜித்' முகூர்த்தத்தில், ஜூலை 7 மதியம் 12:05 முதல் 12:45 மணி வரை கும்பாபிஷேகம் நடத்துவது தான் சரியானது. அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.

கோவில் தரப்பில், 'ஜூலை 7 காலை 6:00 முதல் காலை 6:40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்தது.

நீதிபதிகள்: விதாயகர், முத்தான்விளை மடம் தந்திரி, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜாபட்டர், சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தி அடங்கிய குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுப்படி நேரத்தை தேர்வு செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us