ADDED : ஜன 07, 2024 06:50 AM
மேலுார்: தும்பைபட்டியில் மனித சமூக விழிப்புணர்வு அமைப்பு, வசந்தோதயா அறக்கட்டளை மற்றும் ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் அயூப்கான், அறக்கட்டளை நிறுவனர் விஜயபாண்டி துவக்கி வைத்தனர்.
பெண்கள்,சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பரதநாட்டிய போட்டிகள் நடந்தன.
பெற்றோரை இழந்த 2 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 6 மாணவர்களின் கல்விச்செலவை உயர்கல்வி வரை ஏற்பதாக மனித சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.