/உள்ளூர் செய்திகள்/மதுரை/லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற பொய் வாக்குறுதிகள் தி.மு.க., மீது தினகரன் குற்றச்சாட்டுலோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற பொய் வாக்குறுதிகள் தி.மு.க., மீது தினகரன் குற்றச்சாட்டு
லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற பொய் வாக்குறுதிகள் தி.மு.க., மீது தினகரன் குற்றச்சாட்டு
லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற பொய் வாக்குறுதிகள் தி.மு.க., மீது தினகரன் குற்றச்சாட்டு
லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற பொய் வாக்குறுதிகள் தி.மு.க., மீது தினகரன் குற்றச்சாட்டு
ADDED : பிப் 25, 2024 05:06 AM
மதுரை : ''சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முதல்வர் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது போல லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற பட்ஜெட்டில் பொய்யான திட்டங்களை அறிவித்துள்ளார்'' என அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தொழில் வளர்ச்சி தேவைதான். ஆனால் விவசாய நிலங்களை அழித்து அத்தகைய தொழில் வளர்ச்சி தேவையா. விவசாய நிலங்களை அழிக்காமல் தரிசு நிலங்களில் சிப்காட் போன்ற நிறுவனங்கள் செயல்படுத்தலாம். பயன்பாடு அற்ற நிலங்களில் சிப்காட் போன்ற நிறுவனங்கள் செயல்படுத்தப்படும் என தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால் அத்தகைய வாக்குறுதிகளை தி.மு.க.,வே மீறுகிறது.
ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஒரு நிலைப்பாடும் ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு நிலைப்பாடும் எடுக்கிறார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல. ஹிட்லர் ஆட்சி போல உள்ளது. லோக்சபா தேர்தலில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.,வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.