ADDED : ஜன 28, 2024 06:56 AM

திருப்பரங்குன்றம், : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியின் 28வது பட்டமளிப்பு விழா நடந்தது.
செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். தலைவர் ராஜகோபால், துணைத்தலைவர் ஜெயராமன், உதவிச் செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப்பிரிவு இயக்குநர் பிரபு, நிர்வாகிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
குமரக்கோவில், நுாருல் இஸ்லாம் உயர்கல்வி மைய சார்பு வேந்தர் பெருமாள்சாமி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில கவுன்சில் உறுப்பினர் செயலாளர் ஸ்ரீநிவாசன், 985 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். 59 மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.
ஆங்கிலத் துறைத் தலைவர் தனலட்சுமி, பேராசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.