ADDED : மே 25, 2025 10:57 PM
மேலூர்: மதுரை மாவட்டம் அ.வலையபட்டி துரை மகன் அழகன் 14, நேற்று சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே துவார் பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க சென்றார்.
அப்போது காளை அவரை முட்டியது. இதில் காயமடைந்தவரை சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியில் அவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.