ADDED : ஜூன் 24, 2024 04:27 AM
மதுரை : மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் காதக்கிணறு ஊராட்சி கிளையில் சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் தங்கவேல்சாமி, கிளைத் தலைவர் கண்ணன், செயலாளர் சுரேஷ், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய செயலாளர் ஜெய்கணேஷ், இரணிய ஊராட்சி தலைவர் வீரபாண்டி, மேற்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.