ADDED : பிப் 06, 2024 12:41 AM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை வயது வந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவாக்கப்பணித்துறை சார்பில் பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி வகுப்பு பிப்., 12 முதல் துவங்கவுள்ளது.
இப்பயிற்சியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பெறாத, அதற்கு மேல் படித்த ஆர்வமுள்ள பெண்கள் சேரலாம். பயிற்சி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும். ஒரு பயிற்சிக்கு 20 நபர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர். பயிற்சி முடித்த பின் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பம் பெற விரும்புவோர் 'இயக்குநர், வயதுவந்தோர் தொடர்கல்வி துறை, மதுரை காமராஜ் பல்கலை, அழகர்கோவில் ரோடு, மதுரை' என்ற முகவரியில் நேரில் பெறலாம். விவரங்களுக்கு 98404 97371 ல் தொடர்பு கொள்ளலாம் என இயக்குநர் (பொறுப்பு) சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.