ADDED : செப் 10, 2025 02:04 AM
மதுரை : மதுரையில் அமைச்சர் மூர்த்தி, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (செப்.,11) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் துணைமுதல்வர் உதயநிதி அஞ்சலி செலுத்துகிறார்.
இதற்காக இன்று இரவு 8:30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகை தரும் உதயநிதிக்கு விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று வரவேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.