Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

ADDED : ஜன 31, 2024 01:31 AM


Google News
புதுடில்லி:வடக்கு டில்லி நரேலாவில், சொத்துத் தகராறு காரணமாக வாலிபரை சரமாரியாக தாக்கிய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.

இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் புறநகர் வடக்கு மண்டல துணை கமிஷனர் ரவிகுமார் சிங் கூறியதாவது:

நரேலா மார்க்கெட்டில் ஒருவரை சிலர் தடியால் சரமாரியாக தாக்கும் 'வீடியோ' சமூக ஊடகங்களில் பரவுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினோம்.

இந்த தாக்குதல் குடியரசு தின நாளில் நடந்துள்ளது.

தாக்கப்பட்டவர் ஹோலம்பி குர்த் கிராமத்தைச் சேர்ந்த தீபக்,32. என்பதை கண்டுபிடித்துள்ளோம்.

சொத்துத் தகராறு காரணமாக தாக்கப்பட்ட அவர், ஷ்ரத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளார். சம்பவம் குறித்து, 28ம் தேதி புகார் மனு கொடுத்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us