ADDED : மார் 23, 2025 04:36 AM
திருமங்கலம் : திருமங்கலம் சோமசுந்தரம் தெருவை சேர்ந்த காதர் (எ)முத்துப்பாண்டி வீட்டில் பதுக்கி வைத்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து திருமங்கலம் நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு சோதனை நடத்தினர்.
இதில் 32 கிலோ குட்கா பொருட்கள், ரூ. 61 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.