ADDED : ஜூலை 19, 2024 05:51 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றிய துவக்க பள்ளியில் வட்டார வள மைய துவக்க, நடுநிலை பள்ளிகளில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் தலைமை வகித்தார்.
பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், பூமிநாதன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். தலைமை ஆசிரியர் கிறிஸ்டியானா தனசீலி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் காந்தி குமார், ஆசிரியர் பயிற்றுனர்கள் லட்சுமி, சரண்யா செய்திருந்தனர்.