/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் 'தொட்டு' தொடரும் 'ஸ்பா' விபச்சாரம்: வாடிக்கையாளர்களை 'வளைக்கும்' சுவராஸ்யம் மதுரையில் 'தொட்டு' தொடரும் 'ஸ்பா' விபச்சாரம்: வாடிக்கையாளர்களை 'வளைக்கும்' சுவராஸ்யம்
மதுரையில் 'தொட்டு' தொடரும் 'ஸ்பா' விபச்சாரம்: வாடிக்கையாளர்களை 'வளைக்கும்' சுவராஸ்யம்
மதுரையில் 'தொட்டு' தொடரும் 'ஸ்பா' விபச்சாரம்: வாடிக்கையாளர்களை 'வளைக்கும்' சுவராஸ்யம்
மதுரையில் 'தொட்டு' தொடரும் 'ஸ்பா' விபச்சாரம்: வாடிக்கையாளர்களை 'வளைக்கும்' சுவராஸ்யம்

'ஸ்பா' சென்டர்கள் பின்னணி
'மசாஜ் செய்வதும் தொழில்தான். எனவே உரிய நிபந்தனைகளுடன் 'ஸ்பா' சென்டர் நடத்தலாம்' என வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் 50 'ஸ்பா' சென்டர்கள் புற்றீசல் போல் உருவாகியுள்ளன.
வாடிக்கையாளர்களை 'வளைப்பது' எப்படி
'ஸ்பா' சென்டருக்கான வெப்சைட், சமூகவலைத்தளத்தில் வரும் விளம்பரங்களில் இருந்து ஒருவர் தேடும்போது, அவரது அலைபேசி எண் சம்பந்தப்பட்ட சென்டரில் பதிவாகிவிடும். அங்கிருந்து பேசுபவர், என்னென்ன மசாஜ் எல்லாம் செய்வோம் எனக்கூறி கட்டண விபரத்தை தெரிவிப்பார். 'அது உண்டா' எனக்கேட்டால் 'கிடையாது' என தெரிவித்துவிடுவர்.
'புது பீஸ் வந்திருக்கு'
மசாஜ் செய்யும் பெண்கள் தொடர்ந்து ஒரே சென்டரில் 'பணிபுரிய' உரிமையாளர்கள் விரும்புவதில்லை. மதுரையில் உள்ள அனைத்து 'ஸ்பா' சென்டர்களுக்கும் சுழற்சி முறையில் அனுப்பப்படுகிறார்கள். இதற்காகவே 'வாட்ஸ் அப்' குரூப் உள்ளது. பெண்களில் சிலரது போட்டோக்களை 'வாட்ஸ் அப்'பில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி 'புது பீஸ் வந்திருக்கு' என சென்டர் மேலாளர்கள் அழைக்கிறார்கள்.
இருட்டறையில் மசாஜ்
போலீசார் கூறியதாவது: ஐகோர்ட் நிபந்தனைபடி எந்த சென்டரும் முறையாக நடத்தப்படுவதில்லை. ஸ்பா அண்ட் சலுான் என்ற பெயரில் கூட சில இடங்களில் விபச்சாரம் நடக்கிறது. வாடிக்கையாளர் விபரங்களை பதிவேடுகளில் பராமரிப்பதில்லை.