ADDED : மார் 14, 2025 05:39 AM
மேலுார்: மேலுார் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 30 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு லாரி வராததால் 10 நாட்களாக எடை போட்ட நெல் மூடைகள் தேங்கி கிடந்தன.
இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதித்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மண்டல மேலாளர் ஹேமசுந்தரி அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் லாரிகளை அனுப்பி திருவாதவூர், இடையபட்டி கோடவுனிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.