ADDED : ஜூன் 25, 2024 06:20 AM
திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரி கண்மாயில் முனியாண்டிபுரம் பகுதியில் மீன்பிடி வலையில் 8 அடி நீள மலைபாம்பு ஒன்று சிக்கியது.
நேற்று காலை மீன்பிடிக்க வந்த அப்பகுதியினர் திருநகர் பாம்புபிடி வீரர் பாபுக்கு தகவல் தெரிவித்தனர். பாம்பை மீட்டு வன அதிகாரி விவேகானந்தனிடம் பாபு ஒப்படைத்தார்.