ADDED : ஜூன் 26, 2024 07:29 AM

மதுரை : தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சிவா 32, ஆனந்த் 42. இவர்கள் ஆந்திராவிலிருந்து காரில் 212 கிலோ கஞ்சாவை 2018 ல் கடத்தினர்.
மதுரை ஊமச்சிகுளம்- அலங்காநல்லுார் ரோடு செல்லாயிபுரம் அருகே போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப்பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.