ADDED : ஜூலை 30, 2024 05:45 AM

மதுரை : மதுரையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஆம்னி பஸ் டிரைவரின் கைகளை கட்டி சித்ரவதை செய்யப்பட்டதை கண்டித்து அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் பத்மராஜ் கூறியதாவது:
டிரைவர் மீதான தாக்குதல் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் அனைத்து ஆம்னி பஸ் டிரைவர்களையும் பஸ்சை ஓட்ட முடியாத அளிவிற்கு குலை நடுங்க வைத்துள்ளது.
டிரைவரை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
சிறு தவறு செய்தாலும் உரிமையாளர்கள் அதிபயங்கரமாக கொடுமை செய்கிறார்கள். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.