ADDED : ஜூலை 24, 2024 05:35 AM

பெருங்குடி : மதுரை மாவட்ட பளு துாக்கும் சங்கம் சார்பில் மதுரை சவுராஷ்டிரா பள்ளியில் மாவட்ட பளு துாக்கும் போட்டிகள் பல்வேறு வயது பிரிவுகளில் நடந்தது.
61 கிலோ எடை பிரிவில் சரஸ்வதி நாராயணன் கல்லுாரி மாணவர் வெங்கடேசன் முதலிடம் பெற்றார். இதையடுத்து வேலுாரில் நடக்கும் மாநில போடிக்கு தகுதி பெற்றார். அவரை கல்லுாரி முதல்வர் சந்திரன், உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் உட்பட பலரும் பாராட்டினர்.