Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆலைக்குள் புகுந்து ஊழியர் படுகொலை

ஆலைக்குள் புகுந்து ஊழியர் படுகொலை

ஆலைக்குள் புகுந்து ஊழியர் படுகொலை

ஆலைக்குள் புகுந்து ஊழியர் படுகொலை

ADDED : ஜூன் 29, 2024 05:41 AM


Google News
மேச்சேரி, : சேலம் மாவட்டம் மேச்சேரி, எம்.என்.பட்டி ஊராட்சி அரங்கனுாரில், பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி, பிற பொருட்களை தயாரிக்கும் ஆலை உள்ளது.

கருப்பூரை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், 25, பணிபுரிந்தார். திருமணம் ஆகாதவர். நேற்று காலை ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். காலை, 11:00 மணிக்கு வந்த மர்ம நபர், சுபாஷ் சந்திர போஸை, கத்தியால் கொடூரமாக பல இடங்களில் வெட்டியதில், சம்பவ இடத்தில் பலியானார்.

மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் உள்ளிட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். பட்டப்பகலில் ஆலைக்குள் புகுந்து, தொழிலாளியை கொன்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us