Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மருத்துவமனையில் கொலை; கேண்டீன் மாஸ்டர் கைது

மருத்துவமனையில் கொலை; கேண்டீன் மாஸ்டர் கைது

மருத்துவமனையில் கொலை; கேண்டீன் மாஸ்டர் கைது

மருத்துவமனையில் கொலை; கேண்டீன் மாஸ்டர் கைது

ADDED : ஜூலை 19, 2024 05:48 AM


Google News
மதுரை : மதுரை உத்தங்குடி தனியார் மருத்துவமனையில் வேலை செய்தவர் ஒத்தக்கடை நரசிங்கத்தை சேர்ந்த முத்துலட்சுமி 70. ஜூலை 11ல் மருத்துவமனை மொட்டை மாடியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் திருடு போயிருந்தது. அவரது மகன் பூமிநாதன் அளித்த புகாரில் மாட்டுத்தாவணி போலீசார் விசாரித்தனர்.

மருத்துவமனை, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனை கேண்டீனில் வேலை செய்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த அழகர்சாமி 54 மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டியை கொலை செய்தது உறுதியானது.

அழகர்சாமி அளித்த வாக்குமூலம்: முத்துலட்சுமி 8 மாதங்களுக்கு முன் என்னிடம் ரூ.40 ஆயிரம் கடன் பெற்றார். பணத்தை தராமல் தாமதம் செய்தார். மருத்துவமனை மொட்டை மாடியில் வேலை செய்துகொண்டிருந்த போது அவருடன் இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

என் குடும்பத்தை அவர் தரக்குறைவாக பேசியதால் அவரை கீழே தள்ளி கொலை செய்தேன். அவர் அணிந்திருந்த நகையை எடுத்துக் கொண்டேன். இவ்வாறு கூறியுள்ளார்.

மானா மதுரையில் உள்ள ஒரு கடையில் அடகு வைத்திருந்த நகைகளை மீட்ட போலீசார் அழகர்சாமியை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us