ADDED : ஜூன் 11, 2024 06:39 AM
கொட்டாம்பட்டி : சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டி லட்சுமணன் 48. இவரது மகன் மணிகண்டன் 16, தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தார்.
நேற்று கொட்டாம்பட்டி அருகே பாண்டாங்குடி கிராமத்தில் இறந்த தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு குளிர் சாதன சவப்பெட்டியை கொண்டு சென்றார்.
குளிர்சாதன சவப்பெட்டி சரியாக வேலை செய்கிறதா என்பதை சரி பார்த்தபோது மின்சாரம் தாக்கியதில் மணிகண்டன் இறந்தார்.
இன்ஸ்பெக்டர் வினோதா விசாரிக்கிறார்.