ADDED : ஜூன் 30, 2024 04:56 AM
திருமங்கலம் : தமிழ்நாடு மது போதை மற்றும் மனநல மையங்கள் நலச்சங்கம், திருமங்கலம் குட்வில் பவுண்டேஷன் இணைந்து நடத்திய போதை விழிப்புணர்வு ஊர்வலத்தை பி.கே.என்., ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசாந்தி தொடங்கி வைத்தார். எஸ்.ஐ., ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
பவுண்டேஷன் குடிபோதை சிகிச்சை மைய நிர்வாக இயக்குனர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.