ADDED : ஜூன் 12, 2024 06:12 AM
மதுரை : மேலூர் அருகே கம்பூர் காத்தம்மாள் தனது மகளுக்கு 2013ல் திருமணம் செய்து வைத்தார். தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம், 4 கிராம் தங்கம் வழங்கக் கோரி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2014ல் விண்ணப்பித்தார்.
இதற்கு ஊர் நல அலுவலராக பணிபுரிந்த பூங்கோதை ரூ.1500 லஞ்சம் வாங்கியதால் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.2000 அபராதம் விதித்து மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.