Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/இரண்டாவது ஆடி வெள்ளி மாரியம்மன் கோவில்களில் வழிபாடு

இரண்டாவது ஆடி வெள்ளி மாரியம்மன் கோவில்களில் வழிபாடு

இரண்டாவது ஆடி வெள்ளி மாரியம்மன் கோவில்களில் வழிபாடு

இரண்டாவது ஆடி வெள்ளி மாரியம்மன் கோவில்களில் வழிபாடு

ADDED : ஜூலை 27, 2024 12:23 AM


Google News
கிருஷ்ணகிரி: இரண்டாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு, மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபி ேஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் வாழை இலை அலங்காரத்தில் அருள் பாலித்தார். அதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் காய்கறி அலங்காரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுர மாரியம்மன் ஆயிரம் கண் அலங்காரத்திலும், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்திலும் அருள் பாலித்தனர். மேலும், பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி கோவில், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரத்தில் உள்ள அம்பா பவானி கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபி ேஷம், அலங்காரம் நடந்தது. அனைத்து கோவில்களிலும், பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us