ADDED : செப் 23, 2025 01:29 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளி பஞ்., பணியாற்றுகின்ற துாய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சி செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.
அரிபுத்திரன் முன்னிலை வகித்தார். படப்பள்ளி பஞ்., பணியாற்றுகின்ற அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் துாய்மை காவலர்களுக்கும் புத்தாடைகள், இனிப்பு, காரம், நலஉதவிகளை ரோஸி என்.ஜி.ஓ., லட்சுமி மணி, தினேஷ்குமார், சந்தியா ஆகியோர் வழங்கினர். ஆப்பரேட்டர் முருகன் வரவேற்றார். துாய்மை பணியாளர் தீர்த்தகிரி நன்றி கூறினார்.