Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கே.ஆர்.பி.,க்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி.,க்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி.,க்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி.,க்கு நீர்வரத்து அதிகரிப்பு

ADDED : ஜூன் 14, 2025 06:51 AM


Google News
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, கர்நாடகா மாநிலம் பெங்க-ளூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த மே, 20ல் அணைக்கு நீர்வரத்து, 4,208 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம், 51 அடியாக இருந்-ததால், அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. பின்னர் போதிய மழையின்றி படிப்படியாக நீர்வரத்து குறைந்து வந்தது.அதன்படி கடந்த, 5 முதல் தலா, 183 கன அடியாக நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் கடந்த, மூன்று நாட்களுக்கு முன்பு தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நேற்று, 376 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணை நீர்மட்டம், 51.10 அடியாக உள்ளதால், அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 171 கன அடியும், கால்-வாயில், 12 கன அடியும் என மொத்தம், 183 கன அடிநீர் திறக்-கப்பட்டிருந்தது.

பாரூர் பெரிய ஏரியின் மொத்த உயரமான, 15.60 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளதால், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும், 29 கன அடிநீர் கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை பாம்-பாறு அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், 40 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 9.36 அடியாக நீர்மட்டம் இருந்தது. சூள-கிரி சின்னாறு அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர் திறப்பும் இல்லை. அணை மொத்த உயரமான, 32.80 அடியில், 8.46 அடிக்கு தண்ணீர் இருப்பு

உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us